குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி மக்கள்

Published By: Digital Desk 4

23 Sep, 2020 | 10:25 AM
image

கிளிநொச்சி கோணாவில் கிழக்குப் பகுதியில் குடிநீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிததுள்ளனர்

கிளிநொச்சி கோணாவில் கிழக்குப்பகுதியில் தற்போதும் குடிநீருக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றது.

இப்பகுதியில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், போதிய குடிநீர் கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணப்படுகின்ற பொதுக்கிணறுகள் மற்றும் ஏனைய கிணறுகளில் நீர் வற்றிக்காணப்படுகின்றது. இதனைவிட இந்தப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட குழாய்கிணறுகளும் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதனால் இங்குள்ள மக்கள் தமக்கான குடிநீரையும் இதர தேவைகளுக்கான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதிலும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக இங்கிருந்து தண்ணீரைப்பெறுவதற்கு மிக நீண்டதூரம் அயல் கிராமங்களுக்குச் செல்ல வேண்டியதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்;ளனர்.

 ஆகவே பழுதடைந்த கிணறுகளை புனரமைத்துத் தருமாறும் தற்போது வழங்குகின்ற குடிநீரை அதிகரித்துத்தருமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் ஏனைய  அரச அமைப்புக்களாலும் இந்தப் பிரதேசத்தின் தேவைகள் கருதி அமைக்கப்பட்ட கிணறுகள் அனைத்துமே நீர் இன்றிக்காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51