யானைகளின் மர்ம மரணத்திற்கான காரணம் வெளியானது

Published By: Digital Desk 3

22 Sep, 2020 | 10:47 AM
image

தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த மூன்று மாதங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது.

இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைகளில் யானைகள் இறந்ததற்கு, நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை பருகியதே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

யானைகளின் மர்மமான முறையில் மரணமடைந்தமையால் அதிர்ச்சி அடைந்த போட்ஸ்வானா அரசு, யானைகளின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்ட‌றியும் பணியில் வனஉயிரின மற்றும் தேசிய பூங்கா துறையை ஈடுபடுத்தியது. அவர்கள், உயிரிழந்த யானைகளின் உடல்களிலிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். நிலைமயை நன்கு புரிந்துகொள்ள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், வனப்பகுதியின் மேலே விமானங்களில் சென்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், சயானோ எனப்படும் பக்டீரியாக்கள் உற்பத்தி செய்த நச்சுப்பொருள் கலந்த தண்ணீரைப் பருகியதால்தான் யானைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆனால் ‌நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரைப் பருகிய மற்ற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் யானைகள் மட்டும் உயிரிழந்தது எப்படி? என்கிற சந்தேகத்திற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்று வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்கா துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள போட்ஸ்வானா, உலகிலேயே அதிக யானைகளைக் கொண்ட நாடாகும். அங்கு ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08