சுற்றிவளைப்பில் மூவர் கைது: துப்பாக்கிகள் மீட்பு

Published By: J.G.Stephan

19 Sep, 2020 | 02:41 PM
image

நாட்டின் சில பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அலவ்வ
அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாஉல்ல, 7ஆம் கட்டை பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 துப்பாக்கி ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உருலுமுல்ல - அலவ்வ பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

தெரணியகல
தெரணியகல - மியனவிட்ட பகுதியில் சீதாவக்கபுர குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 12 வகை வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை வீதி - மியனவிட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயது மதிக்கத்தக்கவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹிக்கடுவை
கலுபே - ஹிக்கடுவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கல்கட்டஸ் வகை உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சுற்றிவளைப்பை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையக அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறு கலுபே - ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51