மன்னாரில் ஒரு தொகை மஞ்சள் கட்டிகளுடன் சந்தேகநபர் கைது!

19 Sep, 2020 | 11:00 AM
image

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை வலைகளுக்குள் மறைத்து வைத்த நிலையில் படகு ஒன்றில் கடத்த முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை மன்னார் ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை(18) இரவு  கைது செய்துள்ளனர்.

புலனாய்வு தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது, இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 305 கிலோ 400 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மன்னார் எழுத்தூர் பகுதியை சேர்ந்த 50 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட நபரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54