(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இறக்குமதியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நான்கு வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி மீது ஏற்பட்ட தாக்கத்தைக் குறைக்கும் நோக்குடன் இறக்குமதியை முறையாக முன்னெடுத்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வழமைநிலைக்குக் கொண்டுவருதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
அதற்கமைவாக 'சுபீட்சமான எதிர்காலத்திற்கான நோக்கு' என்ற கொள்கைக்கு ஏற்ப தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டல் மற்றும் மறுசீரமைப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக சுங்கவரிகளை தீர்மானிப்பதற்கான குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. அந்தக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவான இடைக்கால நடவடிக்கையாக இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதிப்பொருட்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்கள், வர்த்தகப்பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துதல், பொருள் வழங்குநர்கள் வழங்கும் கடன்வசதியின் அடிப்படையில் அல்லது வெளிநாட்டு நாணயச் செலவின்றி தெரிவுசெய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கல், உள்ளூர் கைத்தொழிற்சாலைகள், விவசாயத்துறை, ஏற்றுமதி தயாரிப்பு மற்றும் உள்ளூர் நுகர்வுக்கான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் படிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழான விதிகளை அறிந்து வெளியிடப்பட்ட 4 விசேட வர்த்தமானிகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM