யாழ். சந்தைகளில் 10 சதவீத கழிவு அறவிடப்படுவதை நிறுத்த நடவடிக்கை!

17 Sep, 2020 | 03:39 PM
image

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படும் நடைமுறையை நிறுத்துமாறு மாவட்ட விவசாய அமைப்புக்களினால் வலியுறுத்தப்பட்டது.

Image may contain: 12 people, people standing and outdoor

அதற்கு அமைவாக இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான நடைமுறை இல்லை என்ற விடயத்தினை விவசாய அமைச்சர், வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு பணித்திருந்தார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய குழுவின் தலைவரிடம் வினவியபோது, “இந்த 10 சதவீத கழிவு அறவிடப்படுவதனை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் உடனடியாக கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இந்த நடைமுறை கைவிடப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கு இதன்மூலம் தகுந்த தீர்வு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15