யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படும் நடைமுறையை நிறுத்துமாறு மாவட்ட விவசாய அமைப்புக்களினால் வலியுறுத்தப்பட்டது.
அதற்கு அமைவாக இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான நடைமுறை இல்லை என்ற விடயத்தினை விவசாய அமைச்சர், வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு பணித்திருந்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய குழுவின் தலைவரிடம் வினவியபோது, “இந்த 10 சதவீத கழிவு அறவிடப்படுவதனை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் உடனடியாக கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது.
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இந்த நடைமுறை கைவிடப்படும். விவசாயிகளின் கோரிக்கைக்கு இதன்மூலம் தகுந்த தீர்வு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
விவசாய அமைச்சர் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு 10 சதவீத கழிவு அறவிடப்படுவது எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM