உகண்டாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றில் குறைந்தது 219 கைதிகள் தப்பிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
கைதிகள் தங்களது சிறை சீருடைகளை கழற்றி நிர்வாணமாக தப்பிச் சென்றுள்ளதாகவும், தப்பிச் செல்வதற்கு முன்பாக 15 ஏ.கே - 47 துப்பாக்கிகளையும் வெடி மருந்துகளையும் 20 மெகசின்களையும் திருடிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் தப்பிச் செல்லும்போது பாதுகாப்பு இரு கைதிகள் பிடிபட்டதாகவும் மேலும் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் கைதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறைக் காவலாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதேநேரம் தப்பிச் சென்றுள்ள கைதிகளை தேடும் நடவடிக்கையை பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
வடகிழக்கு உகாண்டாவில் உள்ள மொரோட்டோ மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்களுக்கு அருகே புதன்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM