கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய தம்பதியை கைது செய்ய உதவி கோரும் பொலிஸார்

Published By: Digital Desk 4

16 Sep, 2020 | 06:24 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டின் பல பகுதிகளிலும் வர்த்தக நிலையம் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டுள்ள தம்பதியினரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேரும் கூறியதாவது,

கொழும்பு - தெமட்டகொட உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்றுவந்த தங்க நகை மோசடிகள் தொடர்பில் இளம் தம்பதியினர் அடையாளம் காணப்படுள்ளதுடன் , இவர்கள் இருவரும் பெயர் பதிவுச் செய்யப்பட்ட குற்றவாளிகள் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மீரிகம இம்புலான பகுதியைச் சேர்ந்த அப்புஹாமிலாகே சுதர்ம சந்தருவன் எனப்படும் அசேல சந்தருவன் மற்றும் கட்டானை - மீரிகம பகுதியைச் சேர்ந்த சமரகோன் ராளலாகே தில்ஹானி குமாரி  எனப்படும் இருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் 126/2014 என்ற இலக்கத்தில் குற்றவாளிகளாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன். குருணாகலை , மீரிகம உள்ளிட்ட  பகுதிகளில் இவர்கள் பல்வேறு கொள்ளைசம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் சி.சி.டி.வி காணொளி காட்சி கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , அந்த காணொளியில் தெரியும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33
news-image

யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு 

2026-04-22 17:25:26
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ்...

2026-04-22 17:26:38
news-image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19...

2026-04-22 17:09:55
news-image

நாட்டின் நிதி பாதுகாப்பு ஆபத்தில்: வெளிநாட்டிற்கு...

2026-04-22 16:38:47