வவுனியா பஸ் நிலையத்திற்குள் வியாபாரம் செய்யத் தடை - வியாபாரிகள் பாதிப்பு

Published By: Digital Desk 4

16 Sep, 2020 | 05:25 PM
image

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்குள் சென்று பஸ்களில் ஏறி நடைபாதை வியாபரம் மேற்கொள்ளத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பி இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது வழமையான செயற்பாடுகளை தொடர்ந்து பஸ் நிலையத்திற்குள் சென்று மேற்கொள்வதற்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் அவர்கள் கோருகின்றனர் . 

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் அடாவடியில் ஈடுபட்ட பொலிஸார் | Virakesari.lk

இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்ட நடை பாதை வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்களில் ஏறி வியாபாரம் மேற்கொள்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . குறிப்பாக பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு குடிதண்ணீர் போத்தல் , கச்சான் , கைக்குட்டை முகக்கவசம் பழவகைகள் போன்ற பயணிகளுக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று வியாபாரம் மேற்கொண்டு வருபவர்களை புதிய பஸ் நிலையத்தின் நிர்வாகத்தினரான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் அனுமதிக்கவில்லை . 

இதனால் இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம் . இந்த 40 பேரும் அவர்களது குடும்பங்களும் இவ்வாறான ஒரு நிலையில் நடுத் தெருவிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே எமது வறுமை நிலையை கருத்திற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கையினை இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என்று மேலும் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02