ஜனாதிபதி - பிரதமருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சி - இந்திக அனுருத்த

Published By: R. Kalaichelvan

16 Sep, 2020 | 04:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டு எதிர் தரப்பினர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

எக்காரணிகளுக்காகவும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த   முடியாது.ஜனாதிபதியுடன்  ஒன்றினைந்தே அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம் என வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க   அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்

வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒரு சில  குறைப்பாடுகளை  கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே      வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள்பரிசீரனை செய்யப்பட்டுள்ளது.   தவறுகளுடன்   நிர்வாகத்தை முன்னெடுத்தால் அது அரசாங்கத்துக்கு பாதிப்பை  ஏற்படுத்தும்.

 20ஆவது திருத்த்தை கொண்டு  எதிர் தரப்பினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில்   முரண்பாடுகளை  தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.  அரசாங்கத்துக்குள் ஜனாதிபதி அணி, பிரதமர் அணி  என  எவ்வித பிளவுகளும் கிடையாது. பிளவினை   ஏற்படுத்த  எதிர் தரப்பினர்  முயற்சிக்கிறார்கள்.  அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

 தவறுகள் திருத்திக் கொள்ளப்படும் ஜனாதிபதியுடன் ஒன்றினைந்து  பிரதமர் செயற்படுவார்.  ஜனாதிபதியும், பிரதமரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே மக்கள்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை  ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுனவிற்கு வழங்கியுள்ளார்கள். மக்களின் ஆணையை மதிக்காமல் செயற்பட்டால்  நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலைமை  தான் அரசாங்கத்துக்கு ஏற்படும் ஆகவே  ஒருபோதும் ஜனாதிபதியும், பிரதமரும் முரண்படாமல்   மக்களுக்கு  சிறந்த சேவையாற்ற ஒன்றினைந்தே செயறபடுவார்கள்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54