மின்சார இணைப்பின்றி கிளிநொச்சியில் 700 குடும்பங்கள்!

Published By: R. Kalaichelvan

16 Sep, 2020 | 12:48 PM
image

கிளிநொச்சியில்   பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் தமது பதிவுகளை மெற்கொண்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜாவின் ஏற்ப்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் இல்லாத குடும்பங்களின் பதிவுகள் நேற்றுக் காலை 10 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட போதே பல வருடங்களாக மின்சாரம் இல்லாது வசித்து வரும் எழுநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது பதிவுகளை வழங்கியுள்ளனர்.

தற்போது இலங்கை மின்சார சபையினால் இலவச இணைப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக மின் இணைப்பினைப் பெறுபவர்கள் இணைப்புக் கட்டணமாக ரூபா 20650.00 இனை செலுத்த வேண்டும் இவற்றை செலுத்தி மின் இணைப்பை பெற முடியாமல் பல குடும்பங்கள் கிளிநொச்சியில் வசித்து வருகின்ற நிலையிலையே இன்று இப் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான மின் இனைப்புக்கள் பெண் தலமைத்துவ குடும்பங்கள் , பாடசாலை மாணவர்கள் உள்ள குடும்பங்கள் ,மாற்றுத்திரனாளிகள் உள்ள குடும்பங்கள், என தர வரிசைப்படுத்தப்பட்டு தர வரிசையின் அடிப்படையில் கட்டம் கட்டமாக மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

இவ் மின்சாரம் பெறுபவர்கள் இலங்கை மின்சார சபையில் தமது பதிவுகளை வழங்கி அனைத்து ஆவனங்களும் சமர்பிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இணைப்பிற்கான பணத்தினை இலவசமாக பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா தனது சொந்த நிதியில் இருந்தும் புலம்பெயர் தமிழ்த் தொண்டர் நிறுவனங்களின் நிதி உதவியிலும் செய்வதற்கான பதிவுகளே இன்று மேற்கொள்ளப்பட்டுளது.

இன்றைய தினம் பதிவுகளை மெற்கொண்ட வர்களில் தரவரிசைப் படி இலவசமாக அவர்களுக்கான இணைப்புப் பணத்தினை செலுத்தும் செயற்திட்டம் மட்டுமே இதற்கான இனைப்பினை மின்சார சபையே வழங்கும்.

அத்துடன் பிரதேச சபை உறுப்பினர் ச.ஜீவராஜா கடந்த சில மாதங்களுக்குள் மட்டும் புலம்பெயர் தமிழ்த் தொண்டர் நிறுவனம் ஒன்றின் நிதிப் பங்களிப்பிலும் தனது சொந்த நிதியிலும் 73 குடும்பங்களுக்கு தலா 20650.00 ரூபா வீதம் இணைப்புப் பணத்தினை செலுத்தி மின் இனைப்பினை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் இன்றும் தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கான இணைப்புப் பணத்தினை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37