இலங்கைக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடர் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) எழுப்பியுள்ள ஆட்சேபனை குறித்து ஆராயுமாறு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நமால் ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது கொவிட்-19 தொற்று நோயால் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை ஒக்டோபர் 24 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
அதனால் இப் போட்டியில் விளையாடுவதற்காக செப்டெம்பர் 27 ஆம் திகதி பங்களாதேஷ் அணி இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எனினும் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் குழுவினர் கொரோனா சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் இணைந்து கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்துடன் அதிகாரிகள் பிறப்பித்தனர்.
இதனால் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் பி.சி.பி. தலைவர் நஸ்முல் ஹசன் நிராகரித்துள்ளார்.
இந் நிலையில் கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பி.சி.பி எழுப்பிய ஆட்சேபனைகளை மறுபரிசீலனை செய்யவும் விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM