விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கை வாபஸ்பெறவுள்ளேன் - பா. டெனீஸ்வரன்

Published By: Digital Desk 3

14 Sep, 2020 | 10:40 AM
image

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இனத்தின் நலன் கருதி வாபஸ்பெறவுள்ளேன் என  வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வழக்கை வாபஸ் பெறுமாறு பல தரப்பினர்களும் கோரிவருகின்றமை தொடர்பில் இன்று காலை (14.09.2020) அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிய போதே  இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல் குற்றச்சாட்டுகளை  முன் வைத்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை முதலமைச்சராக இருந்த போது சி.வி. விக்னேஸ்வரன்  பதிவி விலக்கிய போது  எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுப்படாத என்னையும் பதவி விலக்கியிருந்தார். இதற்கு நான் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தேன். எந்த குற்றமும் செய்யாத என்னையும் பதவி விலக்கியது  எனது  தன்மானத்திற்கு பெரும் பாதிப்பாக இருந்தது. எனவேதான் நீதி  கோரி இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தேன்.  எனவே இந்த வழக்கின் பிரகாரம்  வழங்கிய தீர்ப்பில் நான் வடக்கு மாகாண சபையில் வகித்த அமைச்சுப் பதவியை மீண்டும் எனக்கு வழங்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதனை அப்போது முதலமைச்சர்  பதவியிலிருந்த விக்கினேஸ்வரன் அவர்கள் செய்யவில்லை.

இந்த நிலையில் மீண்டும்  நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாளை செவ்வாய்க் கிழமை நீதி மன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன் போது முன்னாள் முதலமைச்சர் குற்றவாளியாக இனம் காணப்படுவதற்கே அதிக ஏது நிலை காணப்படுகிறது. எனவே அவ்வாறு  அவர் குற்றவாளியாக  இனம் காணப்பட்டால் சிறைத் தண்டனைக்கு உள்ளாக வேண்டி ஏற்படலாம் இதனை கருத்தில் எடுத்தே பலரும் என்னிடம்  வழக்கை வாபஸ்பெறுமாறு கோரி வந்தனர்.  இந்த நிலையில் நான் எதிர்பார்த்த நீதி எனக்கான நியாயம் கிடைத்தமையால் இனத்தின் நலன் கருதி முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான வழக்கை நாளைய தினம் (15.09.2020) வாபஸ்பெறவுள்ளேன். எனத் தெரிவித்தார்.

நான் பதிவி விலக்கப்பட்டபோது எனது நியாயத்திற்காக எனக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை. அப்போது எனது நியாயம் மட்டுமே என்பக்கம் இருந்தது. ஆனால் தற்போது முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், என பலரும் என்னுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். எனவே ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் நலன் கருதியே நான் வழக்கை வாபஸ் பெறவுள்ளேன. எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08