வவுனியாவில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

12 Sep, 2020 | 11:13 AM
image

வவுனியா நகரிலிருந்து மாமடு  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவர்களை மடுகந்தை பொலிஸார் இன்று  (12) அதிகாலை 1.30மணியளவில் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மடுகந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  வவுனியா - மாமடு செல்லும் சந்தியில்  அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைசாவடியில் மாமடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை இன்று அதிகாலை வழிமறித்து  பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

இதன் போது அவர்களிடமிருந்து  2கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் 3கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் என்பவற்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 36 வயதுடைய பூந்தோட்டம், றம்பைக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்தனர்.

கைபற்றப்பட்டுள்ள போதைபொருட்கள் மற்றும் கைதானவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01