வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 59 இலங்கையர் நாடு திரும்பினர்

Published By: R. Kalaichelvan

12 Sep, 2020 | 10:30 AM
image

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை அடுத்து இன்று காலை நாட்டிற்கு 59 இலங்கையர்கள் வந்தடைந்தனர்.

 

கட்டார் , டோஹாவில் சிக்கித் தவித்த 54 இலங்கையர்களே இன்று காலை விசேட விமானமொன்றில் நாட்டிற்கு வந்தடைந்தனர்.

அத்தோடு 4 பேர் டுபாயிலிருந்தும் , அபுதாபியில் இருந்து ஒருவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டிற்கு வந்தடைந்த 59 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவலை கண்டறிவதற்கு 1,890 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்கு சுமார்  249,328 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36