விக்னேஸ்வரனின் கருத்தை தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது - சரத் வீரசேகர

11 Sep, 2020 | 04:28 PM
image

(இராஜதுரை  ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஷ்வரன்  குறிப்பிடும் கருத்துக்களை   இலங்கை  வாழ் தமிழ் மக்களின்  கருத்து என ஏற்க முடியாது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமாகவே இவரது  கருத்துக்கள் தற்போது காணப்படுகிறது.  தமிழ்- முஸ்லிம் மக்களை ஒன்றினைத்தே அரசாங்கம் செயற்படும் என  அரச நிர்வாகம்,    மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற  இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

    அரசியவலமைப்பின் 13வது திருத்தத்தை இரத்து செய்ய  வேண்டும் என   நான்   தனிநபர் பிரேரணையை   பாராளுமன்றில் முன்வைப்பதாக  குறிப்பிட்டதற் கு   தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.        மக்களின் வரிப்பணத்தில் வெள்ளை  யானையாக செயற்படும் மாகாண சபைகளினால் எவ்வித    சேவையும் மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்பதை  அரசியலில் இருந்த போதும்,   குறிப்பிட்டேன் தற்போதும் குறிப்பிடுகிறேன்.       அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றவுடன்  கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை  கிடையாது.

 இனப்பிரச்சிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.     மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு கிழக்கில்  படுதோல்வியடைவோம் என்பதை நன்கு  அறிந்து  முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்ஷ    மாகாண சபைதேர்தலைநடத்தினார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் உரிமை ஜனநாயக முறையில் வழங்கப்பட்டது.

 மாகாணசபை தேர்தல்   தொடர்பில் கடந்த அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எவ்வித   நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.  அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல்  காலவரையறையின்றி பிற்போடப்பட்டது. மாகாண சபை தேர்தலை   அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் என    தமிழ் தேசிய  கூட்டமைப்பினர் அன்றும், இன்றும்  எவ்வித   அழுத்தங்களையும்  பிரயோகிக்கவில்லை.

  பயனற்ற விதத்தில்  உள்ள மாகாண சபை தேர்தலால் எவ்வித பயனும்   எவருக்கும் கிடைக்கப் போவதில்லை.மக்களின் வரிப்பணமே  வீண்விரயமாக்கப்படுகிறது. மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது எனது  தனிப்பட்ட    கொள்கையாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்   சி. வி. விக்னேஷ்வரன்     பௌத்த மதம்,    சிங்கள   இனம் தொடர்பில்  பாராளுமன்றில் குறிப்பிடும்  கருத்துக்கள்      வெறுக்கத்தக்கதாக காணப்படுகிறது.   இவரது  கருத்தை இலங்கை வாழ் தமிழ் மக்களின்    கருத்து என  ஏற்க முடியாது.  அரசியல்  நோக்கங்களுக்காக  இவர்  தமிழ் மக்களை பகடை காயாக    பயன்படுத்திற் கொள்கிறார். தமிழ்- முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு  அரசாங்கம் சிறந்த முறையில்     அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும்  என்றார்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54