ஜனாதிபதியின் கரங்களை தொடர்ந்தும் பலப்படுத்துவோம் - சிவநேசதுரை சந்திரகாந்தன்

11 Sep, 2020 | 01:19 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின்  கரங்களை தொடர்ந்தும் பலப்படுத்தி அரசாங்கத்திற்கு  துணையாக இருப்போமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை,  துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பான நிதி, பொருளாதார, கொள்கை அபிவிருத்தி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தல் மிகப்பெரிய சவாலாக இருந்தது.  எனது கைவிலங்கிடப்பட்டு, எனது குரல் வலை நசுக்கப்பட்டு சிறையில் 5 வருடங்கள் இருந்தேன். நான் வேட்புமனுத்தாக்கல் செய்தபோது புலம்பெயர்ந்த பலர் எனக்கு எதிராகப் பிரச்சாரங்களை செய்தார்கள். ஆனால் அதனை நாம் முறியடித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனிப் பெரும் கட்சியாக பொதுத்தேர்லில் வெற்றிபெற்றுள்ளது. 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த காலங்களில் ஆயுத மேந்தியிருந்தாலும், 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாம் ஜனநாயக இயக்கமாக மாறியிருக்கிறோம். மக்களின் வாக்குகளுக்காக போலி தமிழ்த் தேசியம் பேசிபவர்கள் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. எனவே சாத்தியமான விடயங்களைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். 2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணத்தில் சிதைந்து போயிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தலில் நாம் போட்டியிட்டு, கிழக்கு மாகாணத்தின் முலமைச்சராக நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

2017ஆம் ஆண்டு வரையில் நான் மாகாணசபை உறுப்பினராக இருந்தேன். மைத்திரி - ரணில் - சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் நாட்டில் பல மோசமான சம்பவங்களை செய்திருந்தது. நாம் வாக்களிக்க செல்ல முடியாது துரத்தியடிக்கப்பட்டோம். தற்போது நான் பயங்கரவதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தைப் போன்றதொரு, தேர்தல் விஞ்ஞாபனத்தை நாமும் முன்வைத்திருந்தோம். தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்தி, அரசாங்கத்துக்குத் துணையாக இருப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் உரையை எதிர்க்கட்சியினர் திரிபுப்படுத்தியுள்ளார்கள் -...

2026-01-24 04:19:18
news-image

யாழில். வீட்டு கழிவு நீரை வெள்ள...

2026-01-24 03:59:46
news-image

உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாததால் நான்கு உயிர்கள்...

2026-01-24 03:49:09
news-image

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெறும்...

2026-01-24 03:44:52
news-image

கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக...

2026-01-24 03:40:49
news-image

மட்டக்களப்பு கிரான் பகுதியில் மகாவலி காணிகள்...

2026-01-24 03:33:47
news-image

முக்கிய துறைகள் அரசியலாக்கம்: கல்வி மறுசீரமைப்பில்...

2026-01-23 15:34:11
news-image

மலையக பயிற்சி நிலையங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள்...

2026-01-23 16:05:35
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனம் பாதுகாக்கப்படும்...

2026-01-23 16:49:20
news-image

நோயாளிகளை பணயம் வைத்து போராடுவது நியாயமற்றது...

2026-01-23 16:21:33
news-image

அரசியலமைப்பு பேரவையின் சிவில் உறுப்பினர்களாக மூவர்...

2026-01-23 21:19:02
news-image

முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது...

2026-01-23 17:20:48