வவுனியாவில் குளவிக் கொட்டி மூன்று வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவரும் குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா, ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் பிற்பகல் நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள காணியில் துப்புரவு பணியினை மேற்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது அப் பகுதியில் மரம் ஒன்றில் இருந்த குளவிகள் கொட்டியுள்ளன.
இதனால் தாக்குதலுக்குக்குள்ளான அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு குழந்தையும், குழந்தையின் தாய் மற்றும் உறவினர் ஒருவர் என மூவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் சிகிக்சை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அருள்ராசன் சமிஸ்கா என்ற மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM