அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், இம்முறையும் ரஷ்யா தலையிட்டால், ஜனநாயக கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது,'' என, அக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, ஆப்ரிக்க - அமெரிக்கரான கமலா ஹாரிஸ், கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டர் ஆக உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க தொலைகாட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்,
அமெரிக்காவில் 2016 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்த செனட் புலனாய்வு குழுவில் நான் இருந்தேன். என்ன நடந்தது என்பது குறித்த விரிவான அறிக்கைகளை நாங்கள் வெளியிட்டோம்.
இந்த தேர்தலிலும், ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என தெரிகிறது. அவ்வாறு இருந்தால் அது, ஜனநாயக கட்சியை பாதிக்கும். கடந்த, 2013ல், உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக, ஷெல்பி ஹோல்டர் என்பவரின் வாக்குரிமை முடக்கப்பட்டது. இதையடுத்து, கறுப்பர்கள், தனி நபர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் வாக்குரிமையை முடக்கும் செயல்கள் தொடர்கின்றன.
வடக்கு கரோலினா மேல் முறையீட்டு நீதிமன்றம், கறுப்பர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையில், மிக நுணுக்கமான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்திருப்பதே இதற்கு சான்று.
கொரோனா குறித்து, வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை, டிரம்ப் அலட்சியப்படுத்தி விட்டார். அதே கொரோனா பிரச்னையை, தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறார். இப்படிப்பட்ட ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாக உள்ளார். எத்தகைய தடைகளையும் கடந்து, நாங்கள் வெற்றி பெறுவோம். என்று தெரிவித்தார்.t
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM