மரண தண்டனைக்கைதிக்கு பாராளுமன்ற அனுமதி : ஹிஜாஸை விசாரணையின்றி தடுத்துவைத்துள்ளது ஏன் ? - அலி சாஹிர் மௌலானா கேள்வி

08 Sep, 2020 | 04:08 PM
image

(நா.தனுஜா)

மரணதண்டனைக்கைதி ஒருவரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கும் அரசு , ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோரை மாத்திரம் விசாரணைகளின்றி நீண்டகாலமாக ஏன் தடுத்துவைத்திருக்கிறது ? என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான மரணதண்டனைக் கைதியாக பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொலைக்குற்றவாளி ஒருவருக்கு நீதிமன்றம் மரணதண்டனையை வழங்குகின்றது. பின்னர் அந்தக் குற்றவாளி ஒரு கொள்கை வகுப்பாளராகப் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இருமாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் நடைபெற்று முடிகின்றது.

அவ்வாறிருக்கையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளடங்கலாக மேலும் பலர் விசாரணைகள் எவையுமின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? இது நியாயமானதா? மரணதண்டனைக் கைதிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட இன்னும் யாரெல்லாம் பாராளுமன்றத்திற்குள் இருக்கிறார்கள்? இவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. எனினும் நாம் அதற்கு எதிர்த்திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40