கல்முனை கடற் பரப்பில் எண்ணெய்க் கசிவு -  உடனடியாக ஆராயுமாறு டக்ளஸ் அறிவுறுத்தல்

Published By: Digital Desk 4

06 Sep, 2020 | 01:59 PM
image

(செய்திப்பிரிவு)

கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சங்கமன்கண்டி கடற்பரப்பில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கல்முனை கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான எண்ணெய் படிமங்கள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் அவதானிக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர்.

குறித்த விடயம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா தலைமையிலான அதிகாரிகளுடன் சனிக்கிழமை அவசர கலந்துரையாடலை நடத்திய அமைச்சர், கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19
news-image

மின்சாரக்கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும்...

2025-06-13 02:31:39
news-image

தமிழரசுக்கட்சியிடமிருந்து விக்கியை பாதுகாப்பதற்கு இனி யாருமில்லை...

2025-06-13 02:27:14
news-image

காணி  வர்த்தமானி இரத்து குறித்து அமைச்சரவையிடம்...

2025-06-13 01:46:54
news-image

மத்தியவங்கி பிணை மோசடி: கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்க...

2025-06-13 01:42:25