2 கிலோ கிராம் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்றையதினம் காலை வவுனியா பாலமோட்டை பகுதியிலிருந்து ஓமந்தை நோக்கி இலகு ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணை கடமையில் இருந்த பொலிஸார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது அவரது மோட்டார் சைக்கிளில் 2 கிலோ கஞ்சா கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அவரை கைதுசெய்த பொலிசார், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM