மலையகத்தில் உரத்தட்டுப்பாடு ; அவதியுறும் விவசாயிகள்

Published By: Digital Desk 4

01 Sep, 2020 | 10:47 AM
image

உரத் தட்டுப்பாட்டால் மலையக பகுதியில் விவசாயத்தில் >ஈடுபட்டுள்ளோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மலையக பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

கொரோனா பாதிப்புக்கு பிறகு அரசாங்கத்தால் விவசாயம் மேற்கொள்ளுமாறு பணிப்புரையை தொடர்ந்து மலையக பகுதியில் அதிகளவில் விவசாயத்தில் பெருந்தோட்ட கிராம சிறுதோட்ட மக்கள் ஈடுபட்டனர். 

குறிப்பாக நவதிஸ்பன பகுதியில் அதிகளவில் பயிரிடப்பட்டோருக்கு இலை உரம், காய் உரம், கிழங்கு உரம் கிடைக்காமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் தாம் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலை தோன்றியுள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பகமுவ பிரதேச செலகம், நுவரெலியா பிரதேச செலகம்  மற்றும் கொத்மலை செயலக பிரதேசங்களில் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அதிகளவு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். 

மலையக பகுதியில் உயர்மட்ட பொருட்களை விவசாய மூலம் பெரும் நோக்கில் பயிரிடபட்டபோதும் உரத்தட்டுப்பாட்டால் கதிகலங்கி போய் உள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் காலநிலைக்கு ஏற்ப விவசாயம் மத்திய மலை நாட்டில் மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களால் கறிமிளகாய், பச்சை மிளகாய், லீக்ஸ், கோவா, கரட், போஞ்சி, கத்தரி, கிழங்கு போன்ற காய்கறிகளை பயிரிட்ட போதும் அதற்கான பலனை அடைய முடியாத நிலை தோன்றியுள்ளது.

நாளாந்தம் 25க்கு மேற்பட்ட வாகனங்களில் தம்புள்ள பிரதான மரக்கறி விற்பனை சந்தைக்கு மரக்கறி கொண்டு சென்ற போதும் தற்போதைய நிலையில் 2 அல்லது 3 வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்கின்றனர். காரணம் உயர்ரக மரக்கறி வகைகள் பயிரிட்ட போதும் முறையான உரம் கிடைக்காததால் இந்நிலை தோன்றி உள்ளது என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். 

சம்பந்தப்பட்ட விவசாய திணைக்களம் முன்வந்து விவசாயிகளின் நலன் பேணி அரசாங்கத்திடம் இருந்து உரவகைகளை பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09
news-image

யாழ். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-03-22 12:59:29