சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல். இல் இருந்து விலகியது ஏன் ? வெளியானது புதிய தகவல்

01 Sep, 2020 | 10:09 AM
image

 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உப தலைவர் சுரேஷ் ரெய்னா திடீரென விலகியது ஏன்? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் நவம்பர்  மாதம் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதற்காக போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள்  அங்கு சென்று தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். 

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் கடந்த 21 ஆம் திகதி  அமீரகம் சென்றடைந்தது. 

தங்களது 6 நாள் தனிமைப்படுத்துதலை முடித்து பயிற்சியை ஆரம்பிக்க இருந்த நிலையில் சென்னை அணியை சேர்ந்த 2 வீரர்கள் (தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட்) உள்ளிட்ட 13 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின. 

இதனையடுத்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள், உதவியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சென்னை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் தஉப தலைவரும் அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவரும், ஐ.பி.எல். போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் விராட்கோலிக்கு அடுத்தபடியாக 2 ஆவது இடத்தில் இருப்பவருமான 33 வயதான சுரேஷ் ரெய்னா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியில் இருந்து திடீரென விலகி நாடு திரும்பினார். 

தனிப்பட்ட காரணத்தினால் சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து ஒதுங்கியதாகவும், இந்த தொடரில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துயர சம்பவத்தால் சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஒதுங்கியதாக முதலில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து சுரேஷ் ரெய்னா முழுமையாக விலக காரணம் என்ன? என்பது குறித்து புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஹோட்டலில் அணித் தலைவர் தோனிக்கு ஒதுக்கப்பட்டது போல் தனக்கு ஏனைய வசதியுடன் கூடிய தங்கும் அறை கொடுக்கப்படவில்லை என்று அதிருப்தி அடைந்து அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், கொரோனா பாதிப்பு அச்சம் மற்றும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில் உள்ள நெருக்கடி ஒத்துவராததாலும் அவர் விலகல் முடிவை எடுத்ததாக தெரிகிறது. 

இந்த எதிர்பாராத விலகலால் சென்னை அணியுடனான சுரேஷ் ரெய்னாவின் நீண்ட கால ஒப்பந்தம் முடிவுக்கு வரலாம் என்று கருதப்படுகின்றது.

சுரேஷ் ரெய்னாவின் விலகல் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சீனிவாசன் தெரிவிக்கையில், 

‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் ஒரு குடும்பம் போன்றதாகும். எல்லா சீனியர் வீரர்களும் அதனுடன் இணைந்து வாழ பழகிவிட்டார்கள்.

 உங்களுக்கு தயக்கமோ, அதிருப்தியோ இருந்தால் நீங்கள் விலகிச் செல்லலாம். யாரையும், எதையும் செய்யச்சொல்லி நான் கட்டாயப்படுத்தமாட்டேன்.

 சில நேரங்களில் வெற்றி தலைக்கேறிவிடும். நான் தோனியிடம் பேசினேன். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பிரச்சினை எதுவுமில்லை என்று உறுதி அளித்தார். ‘ஸூம்’ செயலி மூலம் தோனி வீரர்களுடன் பேசி பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். யாரால் தொற்று பரவியது என்பது தெரியவில்லை.

ரெய்னா விலகல் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. உறுதியான மனநிலை கொண்ட அணித் தலைவர் என்னிடம் உள்ளார். தோனி எந்த பிரச்சினையானாலும் எளிதில் குழப்பம் அடையமாட்டார். இது அணியில் உள்ள எல்லோருக்கும் நம்பிக்கையை அளிக்கிறது. 

ருதுராஜ் அருமையான துடுப்பாட்ட வீரர். இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டியின் நட்சத்திரமாகவும் அவர் மாறலாம், யாருக்கு தெரியும். ஐ.பி.எல். போட்டி இன்னும் ஆரம்பிக்கவில்லை. என்ன தவற விடுகிறோம் என்பதை ரெய்னா நிச்சயம் உணர்வார். அதேபோல் அவர் பணத்தையும் (இந்த தொடருக்கான இந்திய மதிப்பில் ரூபா 11 கோடி சம்பளம்) இழக்க போகிறார்’ என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21