அமெரிக்காவினால் நிதியுதவியளிக்கப்பட்ட புதிய பாடசாலை அமெரிக்க தூதுவரினால் திறந்துவைப்பு

31 Aug, 2020 | 11:11 PM
image

சம்பூர், ஓகஸ்ட் 31 – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் சம்பூரில்  புதிய கூனித்தீவு நாவலர் பாடசாலையை ஓகஸ்ட் 26 ஆம் திகதி  திகதி திறந்து வைத்தார். எட்டு வகுப்பறைகளுடன் கூடிய இரண்டுமாடி வகுப்பறை கட்டிடம்  30,000 லீற்றர் கொள்ளளவுடைய சேமிப்புத் தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு முறைமை, மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மற்றும்  அங்கவீனமுடையோருக்கான வசதிகளுடன் கூடிய கழிவறைகள் என்பன இந்த புதிய வசதித்திட்டத்தில் உள்ளடங்குகின்றன. அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளையகத் தின்  முன்னெடுப்பொன்றான இந்த திட்டத்தில் அமெரிக்காவும் இலங்கை கல்வி அமைச்சும் 93 மில்லியன் ரூபாவை (ஏறக்குறைய 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள்) முதலீடு செய்துள்ளன.

Image

“புதிய கோட்பாடுகள் மற்றும் சிந்தனைகளை ஆராய்ந்தறிவதற்கு  மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலொன்றை இந்த புதிய கட்டிடம் வழங்கும்  அதேநேரம், அவர்களுக்கும் அவர்களது சமூகத்துக்குமான எதிர்காலமொன்றையும்  நிர்மாணிக்கிறது,” என்று தூதுவர் டெப்லிட்ஸ் இந்தநிகழ்வில் தெரிவித்தார். “பிள்ளைகளின் கல்வியில் அவர்களை ஆதரிக்கும் மற்றும் வலுவூட்டும் சிறப்புரிமையையும் பொறுப்பையும் அனைத்தையும்  பெரியவர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்,” என்றும்  அவர் குறிப்பிட்டார்.

Image

மிகவும் அவசியமாக இருந்த வகுப்பறை வசதிகளை வழங்குவததற்கு  மேலதிகமாக, உள்ளூரில் இருப்பிடங்களை இழந்த 400 பேர் வரையானோருக்கான அவசரகால தங்குமிடமாக செயற்படக்கூடிய வகையிலும் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பிராந்தியம்  இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படக்கூடியது என்ற வகையில் இது பயனுள்ளதாக அமைந்துள்ளது.

Image

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யாஹாம்பதத் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. இஷாம், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம், மற்றும்  பிரதேச செயலளார் எம்.பி.எம். முபாரக் ஆகியோரும் இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

கடந்த ஒன்பது வருடங்களில், அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளையகத்தின் ஊடாக அமெரிக்க மக்கள் 5.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும்  அதிகமான முதலீடுகள் மூலம் 14 பாடசாலைகளின் நிர்மாணிப்பதற்கு  உதவியுள்ளனர். பாடசாலை நிர்மாண திட்டங்களானது வசதிகளற்ற சமூகங்களுக்கு நேரடியாக பயனளித்து  அமெரிக்காவுக்கும்  உள்ளூர் சமூகங்களுக்கும் இடையிலான நீண்டகால பங்காண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேநேரம், இலங்கையின் இளையோருக்கு கற்பித்தல் தொடர்பிலும் பங்களிப்புச் செய்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58