புத்தளத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த பெருந்தொகை மஞ்சள் மீட்பு ; 6 பேர் கைது

Published By: Digital Desk 4

30 Aug, 2020 | 12:39 PM
image

புத்தளம் கற்பிட்டி, வெள்ளந்தீவு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1396 கிலோகிராம் மஞ்சள் நேற்று சனிக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி 43 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

குறித்த மஞ்சள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சொகுசு கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம்   தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32