வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தியா, தமிழகத்தின் நாகை மாவட்ட வேளாங்கண்ணியில், புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
'கீழை நாடுகளின் லூர்து நகர்' என்ற பெருமையுடன் விளங்கும் இந்த பேராலய திருவிழா, ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழாவை, தஞ்சை மறைமாவட்ட பிஷப் தேவதாஸ் அன்புரோஸ் இன்று 29 ஆம் திகதி மாலை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 8 ஆம் திகதி வரை திருவிழா நடக்கிறது. 7 ஆம் திகதி, அன்னையின் பெரிய தேர் பவனி இடம்பெற்று. 8 ஆம் திகதி, அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக தேவாலயத்தில் பக்தர்கள் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 8 ஆம் திகதி வரை இடம்பெறும் விழா நிகழ்ச்சிகளை பக்தர்கள் வீட்டில் இருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM