கொழும்பு சொய்சா மகளிர் வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்திய பிரதி பணிப்பாளர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார்.
இவ்வாறு பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுமே பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கம்பஹா - பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான தாயொருவரின் முதல் பிரசவத்திலேயே இந்த ஐந்து பெண்குழந்தைகளும் பிறந்துள்ளன. ஐந்து குழந்தைகளுமே நல்ல தேக ஆரோக்கித்துடன் உள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தையின் நிறை மட்டும் குறைவாகவுள்ளதுடன் அக் குழந்தையின் நிறை 1 கிலோவாக காணப்படுகின்றது என வைத்திய பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஏனைய குழந்தைகளின் நிறை 1 கிலா 4 கிராமிற்கும், 1 கிலோ 8 கிராமிற்கும் இடைப்பட்டதாக உள்ளது . இலங்கையில் நான்காவது முறையாக இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM