இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

26 Aug, 2020 | 08:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

  அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட  நான்கு மாத காலத்திற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு  நாள் பாராளுமன்ற விவாதம் நாளையும், நாளை மறுதினமும் இடம் பெறவுள்ளது. எதிர்வரும் 28ம் திகதி  இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  தலைமையில் இன்று அமைச்சரவை  கூட்டம்  ஜனாதிபதி செயலகத்தில்  இடம் பெற்றது.

    2021ம் ஆண்டுக்கான புதிய  வரவு- செலவு திட்டம் உருவாக்கப்படவுள்ளமையினால்    மூன்றாம் காலாண்டுக்கான  இடைக்கால கணக்கறிக்கையினை   உருவாக்க அமைச்சரவை கன்னி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  இதற்கான நடவடிக்கை     கடந்த ஒருவார  காலமாக முன்னெடுக்கப்பட்ட்து.  இதற்கமைய  எதிர்வரும்  நான்கு மாத காலத்திற்கு தேவையான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை  அங்கிகாரம் வழங்கியுள்ளது.

 மூன்றாம் காலாண்டுக்கான இடைக்கால  கணக்கறிக்கையின்   முழு  செலவினம்  1747.68பில்லியன்  நிதியாக   தீர்மானிக்கப்பட்டுள்ளது.    இதற்கமைய    அரசசேவைகள் மற்றும் , மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்கு 194.38    பில்லியன் நிதி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய அமைசசுக்களை காட்டிலும் அரச சேவைகள் அமைச்சுக்கு  அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 இரண்டாவதாக  பாதுகாப்பு அமைச்சுக்கு  174.09  பில்லியன் நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ள அரமுறை  கடன்களை செலுத்த 778.39 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால  கணக்கறிக்கைக்கு ஒதுக்கியுள்ள நிதியை திரட்டிக் கொள்ள 1300  பில்லியன்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ள இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இருநாள் விவாதம் இன்றும் , நாளையும்  இடம் பெறும்.  

 எதிர்வரும் 28ம் திகதி   இடைக்கால கணக்கறிக்கை   பாராளுமன்ற வாக்கெடுக்கிற்கு உட்படுத்தப்பட்டோ அல்லது   வாக்கெடுப்பு இன்றியோ நிறைவேற்றிக் கொள்ளப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35