(செய்திப்பிரிவு)
பிலியந்தல - சூவாரபொல பகுதியிலுள்ள சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது ஹெரோயின் போதைப்பொருளுடன் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பானது மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வீட்டிலிருந்து 75 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 43 வயதான கணவனும் மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சந்தேக நபர்கள் மொரட்டுமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும் வீட்டில் இரகசியமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பணையில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM