கொரோனா தொற்றினால் தென்கொரியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 296 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதன்படி இன்சீயோனிலிருந்து கொரியா ஏயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான கே.இ - 9473 என்ற விமானத்தினூடாக 275 இலங்கையர்கள் இன்று அதிகாலை 8.30 மணிக்கு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்களில் பெரும்பாலோர் வேலைவாய்ப்புக்காக தென் கொரியா சென்றிருந்த இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கட்டார் ஏயர்வேஸ் விமானம் சேவைக்கு சொந்தமான கியூஆர் -6600 விமானம் டோஹாவிலிருந்து இன்று அதிகாலை 1.20 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
நாட்டை வந்தடைந்த அனைத்து பயணிகளிடமும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM