(எம்.மனோசித்ரா)
வேலையற்ற பட்டதாரிகளுக்கு 50, 000 அரச வேலைவாய்ப்புக்களை வழங்கும் வேலைத்திட்டத்தில் தமது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர். இதன் போது சிலருக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,
ஊழியர் சேமலாப நிதியில் அங்கத்தும் பெற்றிருந்த மற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்த விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தொழிலை இழந்துள்ள பட்டதாரிகளுக்கு துரிதமாக வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
தொழில் அற்ற பட்டதாரிகள் அல்லது டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் உரிய தகுதிகள் இருப்பினும் தாம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பலராரும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு உரிய தகுதிகளைப் பெறுவார்களாயின் பயிற்சிக்கு அழைப்பதற்கு எதிர்பாரப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக இவ்வாறான விண்ணப்பதார்களுக்கு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக விண்ணப்பங்களை செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM