நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுவனொருவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அஹூங்கல்ல, மொரகஹஹேன, வெயங்கொடை ஆகிய பிரதேசங்களிலேயே இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அஹூங்கல்ல
அஹூங்கல்ல - வெலிக்கந்த பகுதியில் சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
வெலிக்கந்த - அஹூங்கல்ல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனே குறித்த விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அஹூங்கல்ல - வெலிக்கந்த பகுதி வீடொன்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை 15 வயது சிறுவனொருவன் செலுத்த முற்பட்டுள்ளார். இதன்போது குறித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னுள்ள குடியிருப்பு பகுதியில் சைக்கிள் ஓடிக்கொண்டிருந்த மற்றுமொரு சிறுவனின் மேல் லொறி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவன் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
மொரகஹஹேன
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரணை - கலகெதற பீ - 123 வீதி, மில்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சனிக்கிழிமை மாலை இடம்பெற்றுள்ளது.
ஹொரணை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த கனரக வாகனமொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியாவை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வெயங்கொடை
வெயங்கொடை பொலிஸ் பிரிவின் நயிவல - உடுகம்பொல வீதியில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நயிவல நோக்கி பயணித்த லொறியொன்று துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வீகொட - பெம்முல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதான நபரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குக் காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM