மடூல்சீமை, வெரலபத்தனை தோட்டத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று மாலை 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குறித்த பெண் திருமணம் முடித்து ஒரு வருடமே கடந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு மடூல்சீமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு வந்த இருவரையும் பொலிஸார் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கணவன் வெளியில் சென்றிருந்த நிலையில் குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சடலம் மேலதிக மரண விசாரணைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மடூல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM