பாம்பின் வாயில் சிக்கி இரையாகவிருந்த தனது குட்டி எலியை அந்தப் பாம்புடன் போரிட்டு தாய் எலி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
இத்தாலியின் நேப்பிஸ் நகர வீதியில் மேய்ந்து கொண்டிருந்த குட்டி எலியை ஒரு பாம்பு தனது வாயில் கவ்விக்கொண்டு வேகமாக சென்றது. இதை கவனித்துவிட்ட தாய் எலி, பாம்பை துரத்திச் சென்று அதன் வாலை சரமாரியாக கடித்து குதறியது.
எலியின் கடியை தாங்க முடியாத பாம்பு, குட்டி எலியை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள புதரை நோக்கி ஓடியது, அதன்பிறகும் தாய் எலியின் ஆவேசம் தணியவில்லை, புதருக்குள் புகுந்த பாம்பை தொடர்ந்து விரட்டிச் சென்றது.
சில நிமிடங்களுக்கு பிறகு பாம்பை வீழ்த்திய பெருமிதத்துடன் தாய் எலி, குட்டி எலியை நோக்கி ஓடிவந்தது.
அதுவரை அசைவின்றி கிடந்த குட்டி எலி தனது தாயை கண்டவுடன் துள்ளிக்குதித்து செல்கிறது. குறித்த வீடியோ இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM