குருணாகல் மேயருக்கு எதிரான வழக்கின் செலவீனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்த தீர்மானம்

Published By: J.G.Stephan

18 Aug, 2020 | 05:12 PM
image

(நா.தனுஜா)
குருணாகலையில் தொல்பொருள் முக்கியத்துமுடைய கட்டடமொன்று உடைக்கப்பட்ட விவகாரத்தில் குருணாகலை மாநகரசபை மேயருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான சட்டச்செலவுகளை மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்வதற்கான தீர்மானம் குருணாகலை மா நகரசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வீதிப்புனரமைப்புப் பணிகளுக்காக 13 ஆம் நூற்றாண்டிற்குரிய இரண்டாம் புவனேகபாகுவின் அரச மண்டபம் உடைக்கப்பட்ட  விவகாரத்தில் குருணாகலை மாநகரசபை மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்டங்கலாக ஐவரைக் கைது செய்யுமாறு குருணாகலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கான செலவுகளை மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை நேற்று குருணாகலை மாநகரசபை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த யோசனைக்கு ஆதரவாக 13 உறுப்பினர்களும் எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கின்றார்கள்.

வழக்கு விசாரணைச் செலவுகளை மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுப்பதற்கு எதிராக வாக்களித்த 3 உறுப்பினர்களில் ஒருவர் ஐக்கிய மக்கள் சக்தியையும், மற்றையவர் மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்தவர் என்பதுடன் மூன்றாவது நபர் குருணாகலை மாநகரசபையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23