புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது

Published By: Digital Desk 3

18 Aug, 2020 | 02:46 PM
image

(செய்திப்பிரிவு)

புத்தளம் , நவகத்தேகம - காமினிபுர பகுதியில் சட்ட விரோதமாக புதையல் தோண்ட முற்பட்ட இருவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரிடமிருந்து சட்ட விரோதமாக புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நவகத்தேகம - காமினிபுர பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 77 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்