வவுனியா நகர்ப்பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்தது வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டு வருவதனால் விபத்துக்கள் ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது.
வவுனியா இலுப்பையடி, புகையிரதநிலைய வீதி, ஹொரவப்பொத்தான வீதி போன்றவற்றில் வீதியோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நடைபாதையை முழுமையாக ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால் மக்கள் வீதியால் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் நடமாட்டம் கூடிய இடத்தில் இவ்வாறு ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால் விபத்துக்களும் சம்பவித்து வருகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறுமியொருவர் விபத்தில் பலியாகியிருந்த நிலையில் இதுவரை நகரசபையால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நடை பாதையை ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தொகையும் அதிகரித்து செல்கின்றது.
எனவே நகரசபை மற்றும் பொலிஸார் இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM