(நா.தனுஜா)
கொழும்பிலிருந்து ஷங்காய் நகருக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை சீன சிவில் விமானசேவை முகவரகத்தினால் நான்கு வாரகாலத்திற்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடந்த 7 ஆம் திகதி டுபாயிலிருந்து கொழும்பின் ஊடாக ஷங்காய் நகருக்கு 223 சீனப்பிரஜைகளைக் கொண்ட பயணிகள் விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது. இதற்கு முன்னதாகவும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பயணிகளற்ற இதேபோன்ற இரு விமானங்கள் டுபாயிலிருந்து ஷங்காயிற்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக முக்கிய சர்வதேச விமானசேவை நிறுவனங்கள் அணுகும் பரிசோதனை நிலையத்தில், ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பயணிகள் விமானத்தில் இருந்த 223 பயணிகளுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தப் பரிசோதனைகள் பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன்படி பயணிகள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்தப் பரிசோதனைகள் பயணிகளுக்கும், விமானசேவை ஊழியர்களுக்குமான முற்பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படுபவையாகும்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளில் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது சீனாவில் விமானம் தரையிறங்கிய பின்னர் கண்டறியப்பட்டது. கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பத்தில் சீன சிவில் விமானசேவை முகவரகம் புதிய பாதுகாப்புக்கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் மத்தியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 15 பயணிகள் விமானங்களை சேவையில் ஈடுபடுத்தியிருந்ததுடன், அவை ஐக்கிய இராச்சியம் மற்றும் துபாயிலிருந்து 3000 இற்கும் மேற்பட்ட சீனப்பிரஜைகளை தொற்றுப்பரவல் அல்லது வேறு சம்பவங்கள் எவையும் பதிவாகாமல் சீனாவிற்கு அழைத்துச்சென்றிருக்கிறது.
விமானங்களில் 5 இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டால் மாத்திரமே சீன சிவில் விமானசேவை முகவரகத்தினால் குறித்த விமானசேவையைத் தற்காலிகமாக இடைநிறுத்தும். அந்தவகையில் கடந்த 7 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானத்தில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமையினால், சீன சிவில் விமானசேவை முகவரகத்தின் புதிய கொள்கைகளின் பிரகாரம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவைக்கு 4 வார தற்காலிக இடைநிறுத்தம் விதிக்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM