(நா.தனுஜா)
புதிதாக ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தினால் நாம் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், எம்மோடு இருக்கின்ற பிள்ளைகளுக்கு என்ன நடக்கும் என்ற பயம் மேலோங்கியிருக்கிறது. மீண்டும் ஒரு இன அழிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோன்று நாட்டில் போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை என்றும் காணாமல்போனோர் எவருமில்லை என்று கூறியவர்களுமே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தலைவி கனரஞ்சனி யோகதாஸன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 16 ஆக இருந்த கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் 10 ஆக வீழ்ச்சிகண்டிருக்கிறது. இனியேனும் உள்ளகப் பிளவுகளையும், சுயலாப நோக்கங்களையும் தவிர்த்து இந்தப் பிரதிநிதிகள் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதை முன்நிறுத்தி செயற்படுவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை என்றும் காணாமல்போனோர் எவருமில்லை என்று கூறியவர்களுமே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். இப்படியொரு பின்னணியில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.
நாங்கள் தனிநாடு கோரி ஆயுதமேந்திப் போராடவில்லை. மாறாக காணாமலாக்கப்பட்ட எமது சொந்தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகவே போராடுகின்றோம். இதற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதற்காக 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் 2020 ஆம் ஆண்டாகியும் எவ்வித தீர்வையும் வழங்க முடியவில்லை. மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் வழங்குகின்ற அவர்களால் நீதியை வழங்குவதென்பது இனியும் சாத்தியப்படாது. ஆகவே இறுதி நம்பிக்கையாக எமக்கான நீதியை சர்வதேச சமூகம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே ஒரே எதிர்பார்ப்பாக இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM