ரணில் முன்னரே சிந்தித்திருந்தால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் - மரிக்கார்

Published By: Digital Desk 3

11 Aug, 2020 | 04:33 PM
image

(எம்.மனோசித்ரா)

ரணில் விக்கிரமசிங்க 1994 இல் ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுப்பேற்கும் போது 43 சதவீத வாக்கு வங்கி காணப்பட்டது. ஆனால் இன்று அதனை 2 வீதமாக வீழ்ச்சியடையச் செய்த பின்னரே அவர் பதவி விலக தீர்மானித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே எடுத்திருந்தால் பொதுத் தேர்தலில் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

எதிர்க்கட்சியாக செயற்படப் போவதால் அரசாங்கத்தை வீழ்த்துவது எமது நோக்கம் அல்ல. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அவதானிப்பதற்கு கால அவகாசம் தேவை.

இதேவேளை அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுக்கவோ ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கோ முயற்சிப்பார்களாயின் அவற்றுக்கு எதிராக போராட தயாராகவுள்ளோம்.

ஆனால் நாட்டுக்கு அத்தியாவசியமான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படும் போது அதற்கு ஆதரவளிக்கவும் தயாராகவுள்ளோம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி 19 ஐ நீக்குதல் , ஆணைக்குழுக்கள் மீது கைவைத்தல் , உயர் பதவிகளுக்கு தனக்கு தேவையானவர்களை நியமித்தால் அதற்கு எதிராக செயற்படவும் நாம் தயாராகவுள்ளோம். பொருளாதார மேம்பாட்டுக்கு ஒத்துழைக்கும் அதே வேளை அதனைக் காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சிப்பார்களாயின் அதற்கு இடமளிக்கமாட்டோம்.

பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற சுமார் 4 ஆண்டுகள் சென்றுள்ளன. ஆனால் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் ஸ்தாபிக்கப்பட்டு சில மாதங்களில் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 54 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டமையை பெரும் வெற்றியாகக் கருதுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை எதிர்க்கும்...

2025-11-12 17:03:04
news-image

புதிய அரசியலமைப்பை புறக்கணித்த அரசாங்கத்தை கடுமையாக...

2025-11-12 15:22:17
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார...

2025-11-12 18:05:04
news-image

நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக...

2025-11-12 16:06:52
news-image

அரசாங்கம் பௌத்த சமயத்தையும் கலாசார மரபுரிமையையும்...

2025-11-12 15:23:19
news-image

2028க்கு பிறகு கடனை திருப்பி செலுத்துவதற்கு...

2025-11-12 17:00:17
news-image

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில்...

2025-11-12 16:24:36
news-image

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபா கொடுப்பனவு...

2025-11-12 16:07:48
news-image

அரசாங்கம் போதைப்பொருளை கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைக்கு...

2025-11-12 17:51:43
news-image

மாகாண சபை தேர்தலுக்கு நிதி ஒதுக்கியதாக...

2025-11-12 17:02:07
news-image

வருமானம் குறைந்த உள்ளூராட்சி சபை பகுதிகளில்...

2025-11-12 16:14:15
news-image

மலையக மக்களின் அபிவிருத்தியை சம்பளத்துக்கு மாத்திரம்...

2025-11-12 17:01:37