வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ; ஒருவர் பலி, 11 பேர் காயம்

Published By: Jayanthy

09 Aug, 2020 | 09:04 PM
image

பொலன்னறுவை - அரலகங்வில பகுதியில், போகாஸ் சந்திக்கு அருகே  இடம்பெற்ற விபத்தில், மாணவர் ஒருவர்  உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று பிற்பகல் 3.20 மணியளவில் தெயத்தகண்டியலிருந்து அரலகங்வில நோக்கி வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று  மேலதிக வகுப்புக்காக வீதியில் பயணித்த மாணவர்கள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 14 முதல் 16 வயது வரையிலான 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 4 பேர்  பொலன்னறுவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஏனைய 07 பேர் அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த  16 வயது மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 10:05:04
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58
news-image

இன்றைய வானிலை

2025-04-28 06:04:54
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்த காத்திருக்கிறோம்; ...

2025-04-28 01:47:05
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலில் கண்டி நகரம்...

2025-04-27 22:46:34