தேர்தல் பின்னடைவுகளை மறைப்பதற்காக“ஒற்றுமை”யின் பெயரால் கூட்டமைப்பு நாடகம்: கஜேந்திரகுமார்

Published By: J.G.Stephan

09 Aug, 2020 | 02:35 PM
image

(ஆர்.ராம்)

நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கு வங்கியிலும், பிரதிநிதித்துவத்திலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

அதேநேரம், எமது கொள்கைகளையும், நேர்மையான அரசியல் செயற்பாடுகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றர்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பத்து வருடங்களாக நாம் எமது மக்கள் மத்தியில் உண்மையாக மேற்கொண்ட தெளிவுபடுத்தல்களுக்கும், கொள்கை ரீதியிலான அடிபணியாத அரசியலுக்கும் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்து விட்டது. இவ்வாறான நிலையில் “ஒற்றுமை” யான செயற்பாடு என்ற பெயரில் பின்னடைவுகளை மறைத்து சுயலாப அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகமாடுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஏனைய தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் தான் உருவக்கப்பட்டது. இருப்பினும் அதில் இருப்பவர்களால் தனிநபர் சார்ந்த செயற்படுகளால் தான் பிளவுகள் ஏற்பட்டன என்பதை முதலாவதாக புரிந்து கொள்ள  வேண்டும். அதற்கு பின்னர் பல்வேறு முயற்சிகள் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது கூட்டமைப்பு அனைத்தையும் முடக்கியது.

சரி, அந்த வரலாற்றை நாம் விடுவோம். மிக அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, சிங்கள மக்கள் தமது தெரிவை சிங்கள, பேரினவாத பௌத்த சித்தாந்தத்தினை மையப்படுத்தி தீர்மானித்து விட்ட நிலையில் தமிழ் மக்களின் இருப்பினையும், பாதுகாப்பினையும், அடிப்படையாக வைத்து தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்து மேலெழுந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கான முயற்சியை எடுத்தார்கள்.

அந்த சமயத்தில் நாங்கள் எந்தவொரு நிபந்தனைகளும் இன்றியே பங்கேற்றோம். நியாயமான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும் என்பதையே ஒரே இலக்காக கொண்டு செயற்பட்டோம். ஏனைய தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்து தயாரித்த நிபந்தனைகளை நாம் ஒவ்வொன்றாக வலுப்படுத்தினோம்.

அச்சமயத்தில் தான் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கையை முன்வைத்தோம். தமிழரசுக்கட்சி ரணில் அரசுடன் இணைந்து தயாரித்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை அவர்களே நிராகரிப்பது என்பது சங்கடமான விடயம். அதனால் அவர்கள் அதற்கு உடன் பட்டிருக்கவில்லை. அதில் நியாயம் உள்ளது.

ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், ரெலோ,பி.ஆர்.எல்.எப், விக்கினேஸ்வரன் ஆகியோர் இடைக்கால அறிக்கைவெளியானதும், அது ஒற்றையாட்சியை அடியொற்றியது என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்கள். அத்தகையவர்கள் நாம் முன்வைத்த நிபந்தனையின் நியாயத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகக்குறைந்தது ஆதரிக்கவுமில்லை. அமைதியாக இருந்தார்கள். இதனால் தான் நாம் அந்த நிபந்தனையில் கையொப்பம் இடுவதை தவிர்த்து வெளியேறினோம். தமிழ் அபிலாஷைகளை ஒருநாளும் ஒற்றையாட்சிக்குள் வென்றெடுக்க முடியாது. ஆனால் தமிழரசுக்கட்சி அதனையே செய்ய விளைந்தது. அதேபோன்று தான் ஜெனீவா விடயத்திலும் நடந்து கொண்டது.

இப்படியான நிலைமைகள் காணப்படுகின்றன என்பதை நாம் எமது மக்களுக்கு படிப்படியாக எடுத்துக்கூறி தெளிவுபடுத்தினோம். எமக்கான தேசம் அவசியம் என்பதையும், இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதற்கான முறைமைகளையும் சுட்டிக்காட்டினோம். கூட்டமைப்பு விடுகின்ற அனைத்து சுத்துமத்து விடயங்களையும் பகிரங்கப்படுத்தினோம்.

எமது அரசியல் கோட்பாடுகளுக்கு அமைவாக நாம் நேர்மையாக செயற்பட்டோம். அதன் பிரதிபலிப்பே தற்போது எமக்கான ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். ஒரு தசாப்த போராட்டத்திற்கு கிடைத்தவொரு முதற்கட்ட வெற்றியாகவே நாம் பார்க்கின்றோம். அவ்வாறான நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. வாக்கு வங்கி மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. பிரதிநித்துவங்களும் இழக்கப்பட்டாகிவிட்டது.

இவ்வாறான நிலையில் கொள்கையிலிருந்து விலகியதாலேயே தமக்கு பின்னடைவுகள் ஏற்பட்டது என்பதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறைப்பதற்காக தற்போது ஒற்றுமையாக தமிழ் மக்கள் சார்ந்து பாராளுமன்றிலும், வெளியிலும் செயற்படுவோம் என்று அழைப்பு விடுகின்றார்கள். இதுவொரு அரசியல் நாடாகமாகும். ஆகவே எமது மக்கள் அளித்த வாக்குகளை மறந்து அவர்களுக்காக நாம் வழங்கிய வாக்குறுதிகளை கைவிட்டு கூட்டமைப்பின் பின்னால் சென்று மீண்டும் ஒரு தவை ஏமாறமுடியாது. எமது மக்களையும் ஏமாற்றமுடியாது. ஆகவே அவர்கள் எவ்விதமான நடந்துகொள்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது. அத்துடன் அவர்கள் எமதுகொள்கைகளை ஏற்று இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04