வன்னி தேர்தல் மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட இணைப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்நிலையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 74 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 74 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளது. அந்தவகையில் வவுனியா தொகுதியில்-72, முல்லைத்தீவு தொகுதியில்-74, மன்னார் தொகுதியில்-76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இதேவேளை சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள், வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் பிரதம தலைமைதாங்கும் அதிகாரிகளிற்கு சகலவிதமான அறிவுறுத்தல்களையும் நாம் வழங்கியுள்ளோம்.எனவே பெற்றுக்கொள்ளப்படும் வாக்குப்பெட்டிகள் சீல்செய்யப்பட்ட பின்னர் நாளைகாலை 7 மணியளவில் எண்ணுவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது
அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் தபால் வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள காமினி மகாவித்தியால பகுதிகள் கடுமையான பாதுகாப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM