வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர் திடீரென மரணம்

05 Aug, 2020 | 01:20 PM
image

(நா.தனுஜா)

பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான காரணம் தற்போதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த 82 வயதான மினுவம்பிட்டிய காமினி பீரிஸ் என்ற வயோதிபரே காலை 8.40 மணியளவில் இவ்வாறு மரணமடைந்திருக்கிறார். இவர் பாணந்துறை பெக்கேகம, அம்பலாந்துவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவ்வயோதிபர் தனது இல்லத்திலிருந்து புறப்படுகையில் இருதயவலிக்கு உள்ளாகியிருந்ததாக அவரது உறவினர்கள் கூறியிருக்கின்ற போதிலும், இன்னமும் அவரின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09