நாடளாவிய ரீதியில் 70 தேர்தல் வன்முறை சம்பவங்கள் இதுவரை பதிவு

Published By: Jayanthy

05 Aug, 2020 | 12:30 PM
image

நாட்டின்  9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில்,  காலை 7 மணி முதல் 10 மணி வரையிலான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் 70 தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. 

இவற்றுள் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் 52 முறைபாடுகளும், சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள் தொடர்பில் 07 முறைபாடுகளும் தேர்தல்  மிரட்டல் குறித்து  05  முறைபாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்  கண்காணிப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சம்பவங்களில், தேர்தல்  சட்ட மீறல் தொடர்பில் கேகாலை மாவட்டத்தில் 15 சம்பவங்களும், காலி மாவட்டத்தில் 10 சம்பவங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை இதுவரை சட்டவிரோத பிரச்சாரம் தொடர்பாக  52 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

குறித்த சம்பவங்களில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 39 தேர்தல் வன்முறை சம்பவங்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 11 தேர்தல் வன்முறை சம்பவங்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 4 தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38