இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி உறுதி என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - கள்ளப்பாடு வாக்களிப்பு நிலையத்தில், தனது வாக்கைச் செலுத்தியபின்னர் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,
இத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும் என நம்புகின்றேன்.
அத்தோடு வளமைக்குமாறாக இம்முறைத் தேர்தலில், அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக சில வாக்குச் சாவடிகளை அண்டிய பகுதிகளில் இராணுவச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுக் காணப்படுவதுடன், இராணுவத்தினரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இங்குள்ள மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இத்தகைய அதிக பாதுகாப்பை தவிர்த்து, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய நிலையினை ஏற்படுத்தியிருக்கலாம்.
இருப்பினும் எமது மக்கள் அதிகளவில் வாக்களிக்கச் செல்வார்கள் என நம்புகின்றேன்.
மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி நிச்சயம் என்பதை மிக உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM