வயது குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ள இளைஞர்கள் எப்படியாவது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட , 23 வயதுக்குட்பட்ட , தேசிய அணி என பல பிரிவுகளில் தேசிய அளவிலான கிரிக்கெட் அணி உள்ளது. அதேபோல் மாநில அளவிலும் அணிகள் உள்ளன. இதில் சில வீரர்கள் வயதை குறைத்துக் காட்டி அணியில் முறைகேடாக இடம் பிடித்து விளையாடுகிறார்கள்.
பின்னர் அவர்களின் முறைகேடு கண்டுபிடிக்கும்போது அவர்களின் கிரிக்கெட் வாழ்கையும், அவருக்குப் பதிலாக இடம்பிடிக்க வேண்டிய மற்ற வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும் வீணாகிவிடுகிறது.
இளையோர் அணி பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், வயது முறைகேட்டில் ஈடுபடும் வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் வயது முறைகேட்டில் ஈடுபட்ட வீரர்கள் தானாக முன்வந்து செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் குற்றத்தை ஒப்புக்கொண்டு சான்றிதழ்களை திருத்தம் செய்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இல்லையெனில் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்படும்.
அதன்பின் மாநில மற்றும் தேசிய அணிக்கும் இடம் பெற முடியாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் குடியேற்றம் குறித்த முறைகேட்டில் பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM