கொரேனா தொற்றுக்கு ஏதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய கலைஞர்களின் படைப்பு!

Published By: Jayanthy

04 Aug, 2020 | 02:09 PM
image

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியத்துவமிக்க இந்து விழாக்களில் ஒன்றான விநாயக சதுர்த்திக்காக கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் பெங்களூர் கலைஞர்கள் சிலைகளை வடிவமைத்துள்ளனர்.

Idols made by Bengaluru artist.

இதில் கொரோனா நோயளிக்கு சிகிச்சை அளிக்கும் விதாமாக விநாயகர் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் உதவியாளராக எலியும் கொரோனா நோயாலியும் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அத்துடன் இவ் படைப்பானது கொரொனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வைத்தியர்களின் தியாகத்தை கௌரவிப்பதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இதனை வடிவமைத்துள்ள கலைஞர்கள் ஸ்ரீதர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் "நாங்கள் கொரோனா வைரஸை எதிர்கொள்கிறோம். உலகெங்கிலும் உள்ள கொரோனா தொற்றிலிருந்து விடுபட விநாயக சதுர்த்தி தினத்தில் பிரார்த்தனை செய்யுமாறு  ஸ்ரீதர் கேட்டுகொண்டுள்ளார்.

இம்மாதம் 22 ஆம் திகதி விநாயக சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.  இந் நிலையில் இந்தியாவின் கொரோனா தொற்று அதிகரித்துவருவதன் காரணமாக பல மாநிலங்களில்  பாதுகாப்பான முறையில் கணேஷ் சதுர்த்தி விழாவைக் கொண்டாட வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right