ஒத்திவைக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இறுதி அனுமதி விரைவில் வரும் என்று ஐ.பி.எல். நிர்வாக சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இப் போட்டிகள் இது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் என ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.
எனினும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2 ஆம் திகதி (நேற்று) நடைபெறும் ஐ.பி.எல் ஆட்சி மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இன்று ஐ.பி.எல் ஆட்சி மன்றக்குழு நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு எமீரகத்தில் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும், போட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 26 ஆம் திகதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் ஐ.பி.எல் லீக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM